For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய மாணவர்களுக்கு செளதி உதவித்தொகை நிறுத்தமா?

By Staff
Google Oneindia Tamil News

ஜெட்டா: டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகத்தில் செளதி அரேபியாவைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை செளதி அரேபியா நிறுத்தப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளை அந நாட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் காலித் அல்-அன்காரி மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், டெல்லியில் ஒரு கார் விபத்து தொடர்பாக நடந்த மோதலில் தான் செளதி மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது செளதி நாட்டினருக்கு எதிரான தாக்குதல் அல்ல. இது போன்ற தாக்குதல் எந்த நாட்டிலும் எந்த நாட்டினர் மீதும் நடக்கலாம்.

மேலும் இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியான முறையில் விசாரணையும் நடத்தி வருகிறது.

இதனால், செளதி அரசின் சார்பில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைகள் நிறுத்தப்படும் என்று சில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X