கர்நாடகத்தில் சிமி இயக்கத்தினர் 3 பேர் கைது
கைதான நாவித் காஜி, அன்சன் நிஸாமி, சாதிக் முல்லா ஆகிய இம் மூவரும் சிமி இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு மற்றும் சமீபத்தில் நடந்த பெங்களூரு குண்டு வெடிப்புகளில் இந்த மூவருக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏற்கெனவே கடந்த மே மாதத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பிருக்கக் கூடும் என போலீஸ் சந்தேகிக்கிறது.
இதுவரை பெல்காம் மாவட்டத்தில் மட்டும் 11 சிமி அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் மத்தியப் பிரதேசத்தில் 13 சிமி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கியப் புள்ளியான முன்ரோஜ் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பெல்காமில் இவ்வளவு பேரைக் கைது செய்துள்ளது போலீஸ்.
சிமி இயக்கத்தின் மீதான தடையை டெல்லி ஐகோர்ட் நேற்றுதான் விலக்கியுள்ளது. இந்நிலையில், சிமி இயக்கத்தினருக்கு தடையை மேலும் நீட்டிக்க மத்திய அரசு இக் கைது சம்பவங்கள் மற்றும் கைதானவர்களின் வாக்கு மூலங்களைப் பயன்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.