For Daily Alerts
Just In
இலங்கை ராணுவம் தாக்குதல்-60 புலிகள் பலி
கொழும்பு: இலங்கை ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 60 புலிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் நுழையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வன்னிப் பகுதியில் ராணுவம் நேற்று அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. அதே நேரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளிலும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 60 புலிகள் பலியாயினர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவத் தரப்பில் 3 வீரர்கள் பலியாயினர். 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments
Story first published: Monday, August 11, 2008, 15:35 [IST]