For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவையில் அரசு கேபிள் டிவி சேவை தொடக்கம்
கோவை: தஞ்சையைத் தொடர்ந்து கோவையிலும் நேற்று முதல் அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது.
ஜூலை 15ம் தேதி முதல் தமிழக அரசின் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2வது கட்டமாக சுதந்திர தினமான நேற்று முதல் கோவையிலும் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கியது.
கோவை சத்தி சாலையில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு நிலையம் மற்றும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரிஜேஷ்வர் சிங் சேவையை தொடங்கி வைத்தார்.
தொடக்கத்தில் 54 சானல்கள் ஒளிபரப்பபடும் என பிரிஜேஷ்வர் சிங் தெரிவித்தார். இதில் தமிழ் சானல்களின் எண்ணிக்கை 18 ஆகும். 3 மலையாளம் மற்றும் 2 கன்னட சானல்களும் இதில் அடக்கம்.
இங்கிருந்து கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு அரசு கேபிள் டிவி சேவை கிடைக்கும்.
Comments
Story first published: Saturday, August 16, 2008, 13:07 [IST]