சென்னையில் ரூ 120 கோடியில் டிஜிட்டல் நூலகம்-கருணாநிதி அடிக்கல்
சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம்தான் தற்போதைக்கு தமிழகத்திலேயே மிகப் பெரிய நூலகமாகும். இதுதவிர மாவட்ட மைய நூலகங்கள் உள்பட தமிழகத்தில் 3755 நூலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் சர்வதேச தரத்திலான, நவீன,டிஜிட்டல் நூலகத்ைத பிரமாண்டமான முறையில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நூலகம் கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 120 கோடி செலவில் உருவாகவுள்ளது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய 2வது நூலகமாக இது திகழும். இதுதவிர தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையும் இதற்குக் கிடைக்கும்.
நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கோட்டூர்புரம் டேட்டா சென்டரில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல்நாட்டுகிறார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறஆர்.
விழாவில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.