For Daily Alerts
Just In
பணவீக்கம் 12.63% ஆனது
ஆகஸ்ட் 9ம் தேதிக்கு முந்தைய வாரத்தில் 12.44 சதவீதமாக இருந்த பண வீக்கம் 9ம் தேதி முடிவடைந்த வாரத்தில் 12.63 சதவீதமாக எகிறியுள்ளது.
இந்த காலாண்டின் முடிவில் 14 சதவிகிதத்தைத் தொட்டு விடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதைத் தடுக்க மேலும் தனது பணவியல் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது நிதி அமைச்சகம்.
ஏற்கெனவே வங்கி வட்டி விகிதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதங்களை அதிகபட்ச அளவான 9 சதவிகிதத்துக்கு உயர்த்தியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மேலும் பணக் கொள்கையில் கடுமையை அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் மேலும் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தக்கூடும் எனத் தெரிகிறது
Comments
Story first published: Thursday, August 21, 2008, 18:40 [IST]