திண்டுக்கல்: கொள்ளை கும்பல் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் போலீஸார் சில தினங்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக் நிற்காமல் வேகமாக சென்றது. போலீஸார் பைக்கை விரட்டிச் சென்று பிடித்தனர். அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.
மேலும் அவரும், அவரது கூட்டாளிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசன், அவரது கூட்டாளிகள் காமராஜ், ராஜ்குமார், ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.