For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானோ-டாடாவுக்கு மகாராஷ்டிரம் 'சிவப்பு கம்பளம்'

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: ஒரு லட்சம் ரூபாய் கார் தொழிற்சாலையை மகாராஷ்டிராவில் அமைக்குமாறு டாடா நிறுவனத்துற்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அழைப்பு விடுத்துள்ளார்.

டாடா நிறுவனம் நானே காரை தயாரிக்க மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் நகரில் தொழிற்சாலையை அமைந்துள்ளது. ஆனால், இந்த தொழிற்சாலைக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டம் நடத்தி வருகிறது.

இதனால் உற்பத்தியை தொடங்க முடியாத நிலைக்கு டாடா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. வெறுப்படைந்த டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா, தொழிற்சாலையை மேற்கு வங்கத்தை விட்டே வேறிடத்துக்கு மாற்றிவிடுவோம் என எச்சரித்தார்.

ஆனாலும், மம்தா விட்டுத் தரும் நிலையில் இல்லை. டாடாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ஆலையை மகாராஷ்டிரத்தில் தொடங்குமாறு டாடா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் அம் மாநில முதல்வர் விலாஸ்ராவ்.

டாடாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க நாங்கள் தயார். அவர் கேட்கும் நிலம், வசதிகளை நாங்கள் தரத் தயாராக உள்ளோம் என்று தேஷ்முக் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் டாடாவுக்கு அழைப்பை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சிங்கூர் தொழிற்சாலையை அமைக்க ரூ. 1,500 கோடி வரை செலவு செய்துவிட்டது டாடா நிறுவனம் என்பது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X