முதல்வர் சொல்லித்தான் வீரசாமி பேசினார்-வைகோ
நெல்லை: கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து முதல்வர் கருணாநிதி சொல்லித்தான், அமைச்சர் ஆற்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்துள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசுகையில், கம்யூனிஸ்ட் குறித்து அமைச்சர் ஆற்காடு வீரசாமியின் பேச்சு இன்று அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஆற்காடு வீராசாமி பேசியதும், அவரை பேச வைத்ததும் கருணாநிதிதான். மார்க்சிஸ்டை சேர்ந்த டிகே.ரங்கராஜனை பற்றி பெயர் குறிப்பிடாமல் கவிதை எழுதிவிட்டு இன்று கருணாநிதி பெரிய நாடகம் ஆடுகிறார்.
ஒரு அரசு தவறு செய்தால் அதை சுட்டிக் காட்ட வேண்டியது கடமையாகும். அதை கம்யூனிஸ்டுகள் செய்ய மாட்டார்களா, அதைதான் ரங்கராஜனும் செய்தார்.
பாஜவினரை பண்டாரம், பரதேசிகள் எனவும், விஷபாம்புகள் என கூறிவிட்டு, அவர்களோடு கருணாநிதி கூட்டு வைத்து கொண்டதை கம்யூனிஸ்டுகளும் சுட்டிகாட்டியதில் கருணாநிதிக்கு கோபம் வந்து விட்டது என்றார் வைகோ.