வகுப்பறைதோறும் நூலகம்-அரசு உத்தரவு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளிலும் வரும் 30-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
பள்ளிகளில் உள்ள நூலகங்களின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி குறியதாவது:
சிறந்த புத்தகங்களைப் படிக்கும் போதுதான் மாணவர்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஏற்ப புத்தகங்களை தரம் பிரிக்க வேண்டும்.
பிறகு புத்தகங்களை வகுப்பறைகளில் வரிசையாகத் தொங்கவிட வேண்டும். காலையிலும், மதிய உணவு இடைவேளையிலும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வராத போது மாணவர்கள் எடுத்துப் படிக்கலாம்.
இந்த புத்தகங்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் மற்ற வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும். புத்தகத்தை வெள்ளிக்கிழமை அன்று எடுத்து சென்று திங்கட்கிழமை ஒப்படைக்கலாம். இத்திட்டம் 30- ம் தேதிக்குள் எல்லாப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்றார்.