விஜேந்தர்-சுஷிலுக்கு கோலாகல வரவேற்பு
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் குமார், மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆகியோர் டெல்லி திரும்பினார். அவர்களுக்கு ரசிகர்கள் சிறப்பானவரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் வரவேற்றார். இந்திய விளையாட்டு ஆணையக இயக்குநர் ஷியான் சாட்டர்ஜி உள்ளிட்டோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுஷில் குமார் பேசுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நான் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தாலும் கூட லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வெல்ல முயற்சிக்கப் போகிறேன் என்றார்.
விஜேந்தரையும், சுஷில்குமாரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது.