For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: ஈவ்டீசிங் செய்த 2 வாலிபர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி மாணவிகளை ஈவ்டீசிங் செய்த இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (19). ஸ்பென்சர் பிளாசாவில் கடை வைத்துள்ளார். அதே தெருவை சேர்ந்தவர் தேவி (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு மாணவி.

தேவி பள்ளிக்கு செல்லும் போது அருண்குமார் பின் தொடர்ந்து சென்று கிண்டல் செய்வதும் தொந்தரவு செய்வதுமாக இருந்தார். இதுகுறி்தது பெற்றோரிடம் சொல்லி, பள்ளிக்கு செல்ல பயமாக இருக்கிறது என்று தேவி அழுதுள்ளார். இதையடுத்து தேவியின் பெற்றோர் ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸ்ல் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண் குமாரை கைது செய்தார்.

மற்றொரு ஈவ் டீசிங் சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கரி (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு மாணவி. சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணன் (20), என்பவர் சங்கரியை தொடர்ந்து ஈவ்டீசிங் செய்து வந்தார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் சங்கரியின் பெற்றோர் போலீஸில் புகார் செய்யதனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X