For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் கிடுக்கிப்பிடி-இலங்கை நிதான ரன் சேர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சால் இலங்கை வீரர்களின் ரன் குவிப்பு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 5வது ஒரு நாள் போட்டி கொழும்பில் இன்று பகலிரவு போட்டியாக தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே முதலில் பேட்டிங்கைத் ேதர்வு செய்தார்.

ஜெயசூர்யாவும், வர்னபுராவும் பேட்டிங்கைத் தொடங்கினர். முதல் விக்கெட்டாக ஜெயசூர்யா ஒரு ரன்னில் வீழ்ந்த்ரா. வர்னபுரா சற்று நிலைத்து ஆடி 30 ரன்களைச் சேர்த்தார். ஜாகிர் கான் ஜெயசூர்யாவை அவுட் செய்ய, பதான் வர்னபுராவை வீழ்த்தினார்.

உதாவத்தே சிறப்பாக ஆடி 43 ரன்களைச் சேர்த்தார். இவரும் பதான் பந்தில் வீழ்ந்தார். அதிரடி வீரரானா சங்கக்காரா 1 ரன் எடுத்து ஆட்டமிழ்ந்தார்.

26 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

இர்பான் பதான் 2 விக்கெட்களையும், ஜாகிர்கான், ஆர்.பி.சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X