For Daily Alerts
Just In
ஒரிஸ்ஸா வன்முறை: இன்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பந்த்
ஒரிசாவில் வி.எச்.பி. தலைவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. சர்ச்சுகள் தாக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ அமைப்புகளும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
இதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை மூடி பந்த் நடத்த இந்திய கத்தோலிக்க பிஷப்கள் சபை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மூடப்படுகிறது.
தமிழகத்திலும் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்படும் என தமிழக கத்தோலிக்க பிஷப்கள் சபை அறிவித்துள்ளது.
Comments
Story first published: Friday, August 29, 2008, 11:00 [IST]