For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரிஸ்ஸா வன்முறை: இன்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பந்த்

By Staff
Google Oneindia Tamil News

Catholic School
சென்னை: ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பந்த் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் இன்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என பிஷப்கள் சபை அறிவித்துள்ளது.

ஒரிசாவில் வி.எச்.பி. தலைவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. சர்ச்சுகள் தாக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ அமைப்புகளும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

இதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை மூடி பந்த் நடத்த இந்திய கத்தோலிக்க பிஷப்கள் சபை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மூடப்படுகிறது.

தமிழகத்திலும் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்படும் என தமிழக கத்தோலிக்க பிஷப்கள் சபை அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X