For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ரேஷன்' கடத்தலை விசாரிக்க தனி நீதிமன்றம்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்கை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல், மண்ணெண்ணை, கேஸ், பெட்ரோல், டீசல் கலப்படம் போன்ற குற்றங்களை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. மொத்தம் 16 இடங்களில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

ரேஷன் பொருட்களை கடத்தும் குற்றங்களில் ஈடுபவர்களை பிடிக்கும் போலீசார் அந்த அந்தப் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி வருகின்றனர். இதனால் தேவையற்ற அலைச்சல், மற்றும் கால விரயம் உள்பட பல்வேறு சிரமங்களை ஏற்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளை விசாரிக்க மாவட்டத்திற்கு ஒரு தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு, தவறு செய்பவர்கள் விரைவில் தண்டனை பெற வழி செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X