For Daily Alerts
Just In
இலங்கை சிறையில் குண்டு வெடித்து 7 தமிழர்கள் காயம்
கொழும்பு: இலங்கை மட்டக்களப்பில் உள்ள சிறையில் குண்டு வெடித்து 7 தமிழர்கள் காயமடைந்தனர்.
இவர்களில் பலர் விடுதலைப் புலிகள் எனத் தெரிகிறது. மேலும் அங்கிருந்து வெடிக்காத குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கையெறி குண்டு தாக்குதலாக இருக்கக் கூடும் என்று போலீஸார் கூறினர்.
இதற்கிடையே திரிகோணமலையில் கடற்படை தளத்தின் மீது விடுதலை புலிகளின் கடந்த 26ம் தேதி விமானத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் வன்னிப் பகுதியில் புலிகளின் நிலைகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கிளிநொச்சி உள்ளிட்ட வட பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 33 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தங்கள் தரப்பில் 26 வீரர்கள் காயமடைந்ததாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, August 30, 2008, 13:02 [IST]