For Daily Alerts
Just In
சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி: எச்சூரி தகவல்
ராஜமுந்திரி: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடந்து வருவதாக சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.
ராஜமுந்திரி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நேரத்தில் ஆந்திர மாநில கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது. அதுகுறித்து 3ம் தேதி நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
தேசிய அளவில் பல புதிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேரவுள்ளன. ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி சேருவோம் என்றார் எச்சூரி.
Comments
Story first published: Monday, September 1, 2008, 9:32 [IST]