For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலில் விழுந்த மிக்-29: விமானி தப்பினார்

By Staff
Google Oneindia Tamil News

MIG-29
ஜாம் நகர் (குஜராத்): குஜராத் மாநிலம் ஜாம் நகர் பகுதியில், அரபிக் கடலோரம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் மிக்-29 போர் விமானம் கடலில் விழுந்தது. விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.

ஜாம்நகர் கடற்கரையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்தது. பிளைட் லெப்டினென்ட் எஸ். திர், இன்று பிற்பகல் இந்த விமானத்தை செலுத்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்தது.

தகவல் அறிந்ததும் ஜாம்நகர் விமானப்படை தளத்திலிருந்து மீட்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த விமானியை மீட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X