For Daily Alerts
Just In
மத்திய அரசிடம் மின்சாரம் கோரும் தமிழகம்
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசிடம் இருந்து கூடுதல் மின்சாரம் பெற, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.
கடும் மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம்.
இதையடுத்து தமிழகத்திற்குரிய மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறவும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் மத்திய அரசை வலியுறுத்த ஆற்காடு வீராசாமி டெல்லி விரைந்துள்ளார்.
அவருடன் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மச்சேந்திரநாதனும் சென்றுள்ளார்.
மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பகோடியா ஆகியோரை ஆற்காடு நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளார்.
Comments
Story first published: Thursday, September 4, 2008, 10:52 [IST]