புதுச்சேரி-சம்பளம் இல்லா பேராசிரியர்கள், வகுப்புகளை புறக்கணிக்க முடிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் உள்ளிட்ட 145 பேருக்கு பத்து நாளாகியும் ஆகஸ்டு மாதத்திற்கு உரிய சம்பளம் இன்னும் தரப்படவில்லை. இதனால் கல்லூரி பேராசிரியர்கள் பேரவையினர் 10ம் தேதி முதல் புதுவை மாநிலம் முழுவதும் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பேராசிரியர்கள் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
தலைமைச் செயலாளரை கண்டு கோரிக்கை மனு அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சம்பளம் கிடைக்காத பேராசிரியர்கள் சங்கத்தினர் மனித உரிமைகள் ஆணையம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு பேக்ஸ் செய்தி அனுப்பியும் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.
இதனால் கல்லூரி பேராசிரியர்கள் பேரவையினர் 10ம் தேதி முதல் புதுவை மாநிலம் முழுவதும் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சம்பளம் உடனடியாக வழங்க வேண்டியும் சம்பளம் கிடைக்க தடையாக இருந்த அதிகாரிகள் மேல் விசாரணைக் கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்துப் போராட உள்ளனர்.