பற்களால் வேன்-லாரியை இழுக்கும் கண்டக்டர்!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சுப்பலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுக முதலியார் மகன் வேல்சாமி. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.
வேல்சாமிக்கு திருமணம் ஆகி முத்துலெட்சுமி மற்றும் சாந்தி என்ற இரண்டு மனைவிகள். சட்டகல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வரும் மேகலா, 8ம் வகுப்பு படித்து வரும் தாரணி, 6ம் வகுப்பு படித்து வரும் ஆர்த்தி, ஆகிய 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
வேல்சாமி சிறுவனாக இருந்த காலத்தில் அவரது கிராமத்தில் போடப்பட்டிருந்த தெருகூத்து நிழக்ச்சியில் சாககம் செய்த நபர் தனது பற்களை கொண்டு பல்வேறு சாதனை நிகழ்த்தி வயிற்று பிழைப்புக்காக மக்கள் முன்பு நடித்துக் கொண்டிருந்ததை உற்று கவனித்த வேல்சாமிக்கு தானும் பற்களை கொண்டு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்ற தொடங்கியது.
இந்த நிலையில் தனது சாதனை பயணத்தின் துவக்கமாக தமிழ்நாடு விவேகானந்தா யோகா, மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் பொது செயலாளர் சுரேஷ்குமாரின் அறிமுகம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு ஆங்கில பள்ளி விழாவில் பள்ளியின் பேரூந்தை கயிறு கட்டி தனது பற்களால் இழுத்து சாதனை படைத்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் நீதிபதி முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அங்குள்ள டெம்போ டிரவல்லர் வண்டியை கயிற கட்டி பற்களால் இழுத்து இருக்கிறார்.
மேலும் மினி லாரி, மகேந்திரா பயணிகள் வேன், சைக்கிள்கள் போன்றவற்றை பற்களால் கடித்து தூக்கி சாதனை படைத்துள்ளார்.