For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு 3 மடங்கு ஊதிய உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

President of India
டெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதார விவகார கமிட்டி கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆளுநர் ஆகியோருக்கான சம்பள உயர்வு தொடர்பாக கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி 300 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜனாதிபதியின் ஊதியம் ரூ.50,000ல் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதிக்கு ரூ.40,000ல் இருந்து ரூ.1.25 லட்சமும், மாநில ஆளுநர்களுக்கு மாத ஊதியம் ரூ.36,000ல் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு கடந்த 2007 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் கடந்த 21 மாத ஊதியம் அரியர்ஸாக வழங்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X