விஜயனைக் கொலை செய்ய கருணாவுடன் கொட்டமடித்த பானு!
சென்னை: விஜயனைக் கொலை செய்ய கருணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் பானுமதி போயுள்ளார். அவருடன் சேர்ந்து இரவு விருந்து, கிளப்களுக்குப் போவது, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது என தடம் புரண்டு போயுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அவரது மனைவி சுதாவின் கூடப் பிறந்த தங்கையான பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நியமித்த கூலிப் படையின் தலைவனான கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்ட பலரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பானுமதியின் மறுபக்கம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆரி.ன் புகழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவையாக, அவற்றைக் குலைக்கும் வகையில் இருப்பது போலீஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புவனா மூலம் கருணாவின் அறிமுகம் பானுமதிக்கு கிடைத்ததும், அவரை வைத்து விஜயனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார். ஆனால் ஆரம்பத்தில் கருணா ஒத்து வராதது போல நடித்துள்ளார். பானுமதியின் நிலையைப் பார்த்த அவர், அவர் மூலம் விஜயனை தீர்த்துக் கட்டி விட்டு, பானுமதியின் வசம் இருந்த பள்ளியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான்.
இதனால் ஆரம்பத்தில் ஒத்து வராதது போல பிகு செய்துள்ளார் கருணா. இதையடுத்து அவரிடம் நைச்சியமாக நடந்து கொண்டால்தான் கருணா ஒத்து வருவார் என புவனா கூறியுள்ளார். இதையடுத்து கருணாவின் விருப்பம் போல நடக்க ஆரம்பித்துள்ளார் பானுமதி.
அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துள்ளார். கருணாவுடன் தினசரி இரவு ஷோ படம் பார்க்கப் போவது, கிளப்களுக்குப் போவது, விருந்துகளில் பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டல்களில் போய் தங்குவது என அத்தனையையும் செய்துள்ளார். கருணா கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளார் பானு.
சாதாரண அக்கா - தங்கை சண்டை, கூலிப்படை, கொலை என போயுள்ளது எம்.ஜி.ஆர். பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பானு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.