சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் கோர்ட்டில் சரண்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை நேற்று கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரும் பின்னர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில்2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கடை மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து நேற்று மாலை நாலரை மணியளவில் 3 பேரும் சென்னை சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் அருணாச்சலம் முன்னிலையில் சரணடைந்தனர். அதை ஏற்ற மாஜிஸ்திரேட் 3 பேரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு போய் அடைத்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.