For Daily Alerts
Just In
திருப்பூர்: கழிவுநீர் தொட்டியில் விழுந்து வாலிபர் சாவு
திருப்பூர்: திருப்பூர் அருகே சாயப்பட்டறையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார் பாண்டி (26). திருப்பூர் அருகே உள்ள குப்பந்தன்பாளையத்தில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சாய கழிவுகள் வெளியேற்றப்படும் தொட்டியின் மூடியை அகற்றும் வேலையில் குமார் பாண்டி ஈடுபட்டிருந்தார்.
அப்போது தவறி தொட்டிக்குள் விழுந்தார். கழிவு நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Story first published: Thursday, September 11, 2008, 13:58 [IST]