கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை குறையாது!
டெல்லி: கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்தாலும் கூட பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத குறைந்த விலையை அது எட்டியுள்ளது. இரு வரவேற்புக்குரியது.
இது மேலும் குறைய வேண்டும் என விரும்புகிறேன். இருப்பினும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இப்போதைக்கு மறு பரிசீலனை செய்யும் திட்டம் அரசிடம் இல்லை என்றார் அவர்.
தற்போது எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விற்பனையில் தினசரி ரூ. 400 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன. இது கடந்த மாதம் ஒரு நாளைக்கு ரூ. 450 கோடியாக இருந்தது. கச்சா எண்ணை விலை குறைவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் நஷ்டம் சற்று குறைந்துள்ளது.