For Daily Alerts
Just In
மண்டபத்தில் விமானத் தளம்-அதிகாரிகள் ஆய்வு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் விமான தளம் அமைப்பது தொடர்பாக விமானப் படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மண்டபம் அருகே சுந்தரமுடையான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரேடார் தளம் மூலம் இந்திய வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த மார்ச் 17ம் தேதி விமானப்படை ஏர் மார்ஷல் ரானே, இந்த ரேடார் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது மண்டபம் பகுதியில் 22 ஏக்கரில் விமானத்தளம் மற்றும் மேலும் ஒரு ரேடார் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில், விமானதளம் அமைப்பது மற்றும் தற்போதுள்ள ரேடார் செயல்பாடு குறித்து அறிய, திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை குரூப் கேப்டன் உபேதா தனி ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தார். சுந்தரமுடையானில் உள்ள ரேடார் தளம் சென்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Comments
Story first published: Tuesday, September 16, 2008, 13:09 [IST]