For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் இருப்பிடம் மீது விமானப்படை குண்டுவீச்சு

By Staff
Google Oneindia Tamil News

Prabhakaran
கொழும்பு: வன்னி காட்டுப் பகுதியில் வட்டக்கச்சி என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ரகசிய இருப்பிடத்தின் மீது இன்று விமானப் படை குண்டுவீச்சு நடத்தியதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜனக நானயக்கரா கூறுகையில், வட்டக்கச்சி இருப்பிடத்துக்கு பிரபாகரன் அடிக்கடி வந்து போவது வழக்கம். இந்த இடம் அப் பகுதி மக்கள் நுழையக் கூட தடை விதிக்கப்பட்ட இடமாகும்.

அதன் மீது இன்று காலை விமானப் படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. தாக்குதல் நடந்தவுடன் புலிகளின் வயர்லெஸ் தகவல் தொடர்பில் ஏராளமான தகவல் பரிமாற்றம் நடந்தது. ஆனால், பின்னர் அது முழுமையாக நின்றுவிட்டது.

அதே போல முல்லைத்தீவில் புலிகளி் ஆயுதக் கிடங்கின் மீதும் இன்று காலை விமானப் படை தாக்குதல் நடத்தியது என்றார்.

ஆனால், இந்தச் செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

பிரபாகரன் சரணடைய வேண்டும்-மகிந்தா:

இந் நிலையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.

அவரை விரைவில் பிடித்துவிடுவோம். அவ்வாறு பிடிபடும் பட்சத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவரை இந்திய அரசு கோரினால், இந்தியாவின் வசம் ஒப்படைப்போம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X