For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண வீக்கம் மீண்டும் உயர்வு-12.14 சதவீதமானது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: உணவுப் பொருட்கள் விலை உயர்வின் எதிரொலியாக பண வீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது. செப்டம்பர் முதல் வார இறுதியில், பண வீக்க விகிதம் 12.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் பண வீக்க விகிதம் 12.10 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.04 சதவீதம் உயர்ந்து, 12.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும் இந்த பண வீக்க உயர்வு நிலையானதே. கவலைப்படத் தேவையில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் பண வீக்க விகிதம் 12.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது என நிதித்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

உணவு மற்றும் காய்கறிளின் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் கோதுமை உள்ளிட்டவற்றின் விலையில் 3 சதவீத உயர்வு காணப்பட்டது. இதுவே பண வீக்கம் உயர முக்கிய காரணம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X