இந்து தர்மம் போதிக்க திருப்பதி தேவஸ்தானம் ரூ. 46 லட்சம்
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் 23 மாவட்டங்களிலும் இந்து தர்மத்தைப் போதிக்க ரூ. 46 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 23 மாவட்டங்களிலும் மாவட்ட தர்மிக் ஆலோசனை கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்சில்கள், இந்து தர்மத்தைப் போதிக்கும் பணியில் ஈடுபடவுள்ளன. இதற்காக ஒரு கவுன்சிலுகுக்கு தலா ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான போர்டு தலைவர் ஆடிகேசவலு செய்தியாளர்களிடம் கூறுகையில், சனாதன தர்மத்தை கிராம அளவில் பரப்புவது அவசியம். அதை தீவிரமாக மேற்கொள்ளவுள்ளோம்.
ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் இலவச திருமணங்கள், மங்கள துவாதஸ்யா உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தர்மிக் ஆலோசனைக் கவுன்சில் மூலம் இந்து தர்மத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், மாலை நேர பஜனை நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.