For Daily Alerts
Just In
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்குப் புதிய உலை
மும்பை: மும்பையைச் சேர்ந்த மெட்சோ நிறுவனம், தமிழ்நாடு செய்தித் தாள் நிறுவனத்திற்கு காகிதக் கூழ் தயாரிப்பு உபகரணத்தை சப்ளை செய்யும் ஆர்டரைப் பெற்றுள்ளார். இதன் மதிப்பு ரூ. 92 கோடி ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பகாஸ் அடிப்படையில் காகிதம் தயாரிக்கும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்கு, புதிய காகிதக் கூழ் தயாரிப்பு உலை மற்றும் பிரவுன் ஸ்டாக் சுத்திகரிப்பு உபகரணத்தை மெட்சோ அளிக்கும்.
தற்போது வழங்கப்படவுள்ள நவீன பிரவுன் ஸ்டாக்கைத் தொடர்ந்து ஏற்கனவே உள்ள இரு சிறிய அளவிலான பிரவுன் ஸ்டாக் உலைகள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படும்.
புதிய உலைகள் 2010ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று மெட்சோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Saturday, September 20, 2008, 12:39 [IST]