கள்ளக் காதல்: பெண் எஸ்ஐ ஓட்டம்!
நெல்லை: கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பை சேர்ந்தவர் மேரி ஜெபன்சி. இவர் நெல்லை அருகேயுள்ள மூன்றடைப்பு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு நெல்லை டிஐஜி கண்ணப்பன் நாங்குநேரி டிஎஸ்பி சண்முகநாதனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் விசாரணை நடத்தி அறிக்கையை டிஐஜிக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையில், சப்-இன்ஸ்பெக்டர் மேரி ஜெபன்சிக்கும், ஒரு கிராம பஞ்சாயத்து தலைவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்துத் தலைவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் அவர் மீது சில குற்ற வழக்குகளும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அந்த பஞ்சாயத்துத் தலைவருடன் சப்-இன்ஸ்பெக்டர் மேரி ஜெபன்சி வெளியூர் சென்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இருவரும் ஓடிப் போய்விட்டனர் என்பதைத் தான் அறிக்கையில் இவ்வாறு நாகரீகமாகக் குறிப்பிட்டுள்ளார் டிஎஸ்பி.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மேரி ஜெபன்சியை நெல்லை டிஐஜி கண்ணப்பன் சஸ்பெண்ட் செய்து உத்தரவி்ட்டுள்ளார்.