காந்தி சிலையை சுற்றி கொடிக் கம்பங்கள் - அகற்ற கோரிக்கை
குளித்தலையில் பஸ் நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி பெற்று சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சிலையை தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது.
காந்தி சிலையை சுற்றி அரசு அனுமதியின்றி திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, போன்ற பல கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய அரசியில் விழா, நிகழ்ச்சி நடத்தப்படும்போது இந்த சிலையை மறைத்துதான் தட்டி, பேனர் வைக்கப்படுகிறது. இதனால் காந்தி சிலை மக்கள் பார்வைக்கு சரியாக தெரிவதில்லை.
இது சுதந்திரம் பெற்று தந்த மகாத்மாவை கொச்சைபடுத்துவது போல் உள்ளது. இதனால் காந்தி சிலையை மறைத்து சுற்றி நடப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பல முறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.
'கழகங்களிடமிருந்து' காந்திக்கு 'விடுதலை' பெற்றுத் தருவாரா கலெக்டர்?