For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேதாரண்யத்தில் மத்திய அதிரடிப் படை திடீர் ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரை பகுதியில் மத்திய அதி விரைவு படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது மத்திய அரசின் அதிரடிப் விரைவு படை. இந்த படையின் டிஎஸ்பி விஜயன் தலைமையிலான 40 பேர் கொண்ட குழு வேதாரண்யம் வந்தது.

வேதாரண்யம் கடற்கரை பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது வேதாரண்யம் டிஎஸ்பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ ஸ்டாலின், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரணியன் ஆகியோரை சந்தித்து மீனவர் பிரச்சனைகள், குற்ற சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் கோடியக்கரை, கோடியக்காடு போன்ற பல முக்கிய கடற்கரை பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X