For Daily Alerts
Just In
ராஜஸ்தான் கோவிலில் கூட்ட நெரிசல்-130 பேர் பலி, 450 பேர் காயம்
நவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெஹ்ரான்கர்க் மலைப் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டா கோவிலில் இன்று அதிகாலை தரிசனத்துக்காக குவிந்தனர்.
மலையடிவாரத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள பாதை மிக மிகக் குறுகலானதாகும். அதன் வழியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிக் கொண்டிருந்தனர்.
மலையேறியவர்கள் கோவிலின் வெளியே கதவு திறப்பதற்காக காத்திருந்தனர். காலை 5.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. அப்போது சிலர் திடீரென கோவிலுக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைய முயன்றனர். இதையடுத்து போட்டி போட்டுக் கொண்டு பலரும் கோவிலை நோக்கி முன்னேறவே பெரும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் 130 பேர் மிதிபட்டும், மூச்சுத்திணறியும் பலியாயினர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர்.
Comments
Story first published: Tuesday, September 30, 2008, 16:08 [IST]