For Daily Alerts
Just In
வீரமணிக்கு கறுப்புக் கொடி காட்டிய 13 பேர் கைது
கோபிசெட்டிபாளையம்: தி.க. தலைவர் கி.வீரமணிக்கு கருப்புக் கொடி காட்டிய, இந்து மக்கள் கட்சியைச் ேசர்ந்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திடலில் பெரியாரின் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. சிலையை திராவிடர் கழக தலைவர் வீரமணி திறந்து வைத்தார். விழாவில் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டார்.
அப்போது விழாவில் கலந்து கொள்ள வந்த தி.க. தலைவர் வீரமணி, மற்றும் மத்திய அமைச்சர் ராஜா ஆகியோருக்கு கறுப்புக் கொடி காட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 13 பேர் முயன்றனர்.
இதையடுத்து கோபி சட்டமன்ற தொகுதி இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் அசோகன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments
Story first published: Tuesday, September 30, 2008, 13:59 [IST]