டிசம்பர் 6ம் தேதி குருப்பெயர்ச்சி - ஆலங்குடியில் விசேஷ ஏற்பாடுகள்
ஆலங்குடி: இந்த ஆண்டு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் இடம் பெயருகிறார். இந்த குருப்பெயர்ச்சி டிசம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆலங்குடியில் உள்ள குருபகவான் சன்னதியான ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு குரு பகவான் இடம் பெயருவது வழக்கம். இதைக் குருப் பெயர்ச்சி என்பார்கள். இந்த ஆண்டு தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு குரு பகவான் இடம் பெயருகிறார். டிசம்பர் 6ம் தேதி குருப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
இதையொட்டி குரு பகவான் ஆலயமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த குருப்பெயர்ச்சியால் ஏற்படும் பாதக நிலைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் - சிம்மம், மிதுனம், மேஷம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.