For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூர் காந்தி சிலைக்கு காங்கிரஸார் பாலாபிஷேகம்

By Staff
Google Oneindia Tamil News

கரூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கரூரில் காந்தி சிலைக்கு காங்கிரசார், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழ்நாடு மருத்துவர் பேரவை நிர்வாகிகள் ஆகியோர் பாலாபிஷேகம் செய்தனர்.

நேற்று மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலைக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல், சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் சரவணன், சங்கர், குலாம் பரகத், மற்றும் தமிழ்நாடு மருத்துவர் பேரவை நிர்வாகி வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் காந்திய சிந்தனைவாதிகள் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று லைட்ஹவுஸ் கார்னரை அடைந்தனர்.

அங்குள்ள காந்தி சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து தீபாரதனை செய்து வழிபட்டனர். அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நகர, ஒன்றிய நிர்வாகிகளும் மக்களும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X