For Daily Alerts
Just In
நானோ: கர்நாடகம், ஆந்திராவில் இடம் பார்க்கும் டாடா
டெல்லி: மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் தனது நானோ தொழிற்சாலையை அமைக்க இடம் பார்த்து வருகிறது.
இன்று காலை டாடா மோட்டார்ஸின் நானோ திட்ட நிர்வாக இயக்குநர் ரவி காந்த் மற்றும் அதிகாரிகள், கர்நாடக தலைமைச் செயலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சரை தார்வாட் நகரில் சந்தித்துப் பேசினர். பின்னர் தார்வாட் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலம் தருவதாக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்த இடத்தையும் ரவிகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று மாலை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும் ரவிகாந்த் சந்தித்துப் பேசுகிறார். ஹைதராபாத் மற்றும் சுற்றுப் பகுதியில் இடம் பார்க்கவும் அவர் உத்தேசித்துள்ளார்.
Comments
Story first published: Sunday, October 5, 2008, 15:38 [IST]