அவுட்சோர்ஸிங்கில் உலகிலேயே இந்தியா முதலிடம்
நியூயார்க்: அவுட் சோர்ஸிங் துறையில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது இந்தியா என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின்படி, உலகின் டாப் அவுட்சோர்ஸிங் நதரங்கள் எட்டில் 6 இந்தியாவில்தான் உள்ளன. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி மும்பை மற்றும் புனே ஆகிய ஆறு இந்திய நகரங்களில்தான் உலகில் முன்னணியில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் அவுட்சோர்ஸிங் பணிகள் நடக்கின்றன.
இவற்றைத் தவிர, அயர்லாந்து தலைநகர் டப்ளின் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மடாகி மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர அவுட்சோர்ஸிங் நகரங்கள்.
ஆனால் இந்தப் பட்டியலில் அடுத்த ஆண்டும் இதே நகரங்கள் தொடருமா என்ற சந்தேகம் உள்ளது. காரணம் சீனாவின் பெரிய நகரங்களான ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் பிலிப்பைன்ஸின் செபு சிட்டியும் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்க கடும் போட்டியில் இறங்கியுள்ளன.
டாப்-50 பட்டியலில் கோவை...
உலக அளவில் வளர்ந்து வரும் டாப் 50 ஐடி நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சீனாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய நகரங்கள் கொல்கத்தா (6-வது இடம்), சண்டிகர் (12-வது இடம்), கோயமுத்தூர் (17-வது இடம்), ஜெய்ப்பூர் (31-வது இடம்) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியில் ஆசியக் கண்டத்திலிருந்து மட்டுமே 19 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.