For Daily Alerts
Just In
திண்டிவனம் அருகே விஷச்சாராயத்திற்கு 2 பேர் பலி
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விஷச்சாராயம் குடித்த 2 பேர் பலியானார்கள்.
திண்டிவனம் அருகே உள்ளது நொளம்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் உள்ளிட்ட 2 பேர்விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இருவரும் விஷச்சாராயம் குடித்து பலியாகவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதை ஊர் மக்கள் மறுக்கின்றனர். போலீஸார் விஷச்சாராய சம்பவத்தை மறைக்கப் பார்ப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments
Story first published: Monday, October 6, 2008, 12:09 [IST]