For Daily Alerts
Just In
ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்தது ரிசர்வ் வங்கி!
டெல்லி: கடந்த வாரம் நாட்டின் பணவீக்கம் லேசாகக் குறைந்ததைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி தனது இறுக்கமான பணவியல் கொள்கையை லேசாகத் தளர்த்திக் கொண்டுள்ளது.
முதல் நடவடிக்கையாக, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் சிஆர்ஆரை 9 சதவிகிதத்திலிலிருந்து 8.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. அக்டோபர் 11-ம் தேதி முதல் இந்த புதிய ரொக்க இருப்பு விகிதம் அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் வங்கிகளுக்கு மேலும் கூடுதல் ரொக்க இருப்பு அனுமதிக்கப்படுகிறது. கடன் வழங்கலில் சற்று கூடுதல் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டு வரவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை.
Comments
Story first published: Tuesday, October 7, 2008, 19:26 [IST]