வன்னியில் கடும் சண்டை - 62 ராணுவ வீரர்கள் பலி
கிளிநொச்சியை பிடிக்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது. ராணுவத்திற்கு துணையாக விமானப்படையும் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் வன்னிப் பகுதியில் நேற்று கடும் சண்டை நடந்தது. வன்னி பகுதியில் உள்ள வன்னி விளாங்குளம், வன்னேரிக்குளம், அக்கரையான் ஆகிய பகுதிகளில் முன்னேற ராணுவம் முயன்றது.
இதில் அக்கரையான் பகுதியில் 26 ராணுவ வீரர்களும், வன்னேரிக்குளத்தில் 20 பேரும், வன்னி விளாங்குளத்தில் 16 பேரும் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று முனைகளிலும் முன்னேறும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் பின் வாங்கி ஓடி விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சண்டையில் 82 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்தினரிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தங்களது தரப்பு சேதம் குறித்து புலிகள் தரப்பில் தகவல் இல்லை.