உத்தபுரத்தில் சோகம் - ஆண்கள் இல்லாததால் பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு
மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் மரணமடைந்த சித்ரா என்ற ெபண்ணின் உடலை, ஆண்கள் யாரும் இல்லாததால், ஊர்ப் பெண்கள் அனைவரும் சேர்ந்து அடக்கம் செய்த சோகம் நடந்துள்ளது.
ஜாதிக் கலவரத்தால் தகித்துக் கொண்டிருக்கும் உத்தபுரத்தில் போலீஸாரின் நடவடிக்கைக்குப் பயந்து ஆண்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து விட்டு தலைமைறைவாகியுள்ளனர்.
இதனால் ஊரில் ஒரு ஆண் கூட இல்லை. இந்த நிலையில் தலித் வகுப்பைச் ேசர்ந்த சித்ரா என்ற இளம் பெண் மரணமடைந்தார். போலீஸ் சித்திரவதையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவின் இறுதிச் சடங்கு நடந்தது. ஆண்கள் யாரும் இல்லாததால் பெண்களே ஒன்று கூடி இறுதிச் சடங்கை நடத்தினர். நான்கே நான்கு ஆண்களை மட்டும் இதில் கலந்து கொள்ள போலீஸார் அனுமதித்திருந்தனர். ஆனால் அவர்களை ஒரு வேலையும் செய்ய பெண்கள் விடவில்லை.
இறந்து போன சித்ராவின் உடலை சவ வண்டியில் ஏற்றி, சுடுகாட்டுக்குக் கொண்டு சென்ற பெண்கள் அங்கு இறுதிச் சடங்குகளை நடத்தி அடக்கம் செய்தனர்.
சித்ராவுக்கு தந்தை, 3 சகோதரர்கள் உள்ளனர். நான்கு பேரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.