For Quick Alerts
For Daily Alerts
Just In
அணு சக்தி ஒப்பந்தம்: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து
வாஷிங்டன்: இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இன்று வாஷிங்டனில் கையெழுத்தாகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸும் இதில் கையெழுத்திடுகின்றனர்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்டத்தில் அதிபர் புஷ் நேற்று கையெழுத்திட்டார். இதையடுத்து ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட தடை நீங்கியது.
இதைத் தொடர்ந்து இன்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
முன்னதாக நேற்று சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் புஷ் பேசுகையில், 123 ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் காப்பாற்றப்படும். இதுதொடர்பான இந்தியாவின் கவலைகளுக்கு உரிய தீர்வும் காணப்படும் என்றார்.
Story first published: Friday, October 10, 2008, 9:19 [IST]