இலங்கை: 30 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல்!
கொழும்பு: இலங்கையில் கடந்த இரு தினங்களாக நடந்த கடும் சண்டையில் 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை வாபஸ் வாங்கியதாக அறிவித்த சிங்கள ராணுவம், தொடர்ந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீதும், விடுதலைப் புலிகள் முகாம்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கிளிநொச்சியைச் சுற்றி வளைத்துத் தாக்கி வரும் ராணுவம், விடுதலைப் புலிகளின் அனைத்து முகாம்கள் மீதும் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
சனிக்கிழமையும் நேற்றும் நடந்த தாக்குதல்களில் 30 புலிகள் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் 2 வீரர்கள் பலியானதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
தாங்கள் இப்போது கிளிநொச்சிக்கு 1.6 மைல் தூரத்தில் உள்ளதாகவும், விரைவில் நகரைப் பிடித்து விடுவோம் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி 3 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.