தமிழகத்தில் 11% சிமெண்ட் தேவை அதிகரிப்பு
திருச்சி: தமிழகத்தின் சிமெண்ட் தேவை தற்போது 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டால்மியா சிமெண்ட் தலைமை செயல் அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டால்மியா இன்ஸ்டிட்யூட் ஆப் கன்ஸ்டிரக்ஷன் என்ற கட்டுமான தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடிந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வெங்கடேசன் கூறியதாவது:
தொழிற்பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறை கட்டுமானத் துறையில் அதிகமாக உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு, வருவாயும் கிடைக்கும்.
அதே சமயம் கட்டுமானத் துறையின் பற்றாக்குறையையும் தீர்க்க முடியும். மேலும், இந்த இலவச பயிற்சி வகுப்பில் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து 6 மாத காலம் பயிற்சி பெறலாம்.
தற்போது தமிழகத்தில் சிமெண்ட்டின் தேவை 11 சதவீதமும், ஆந்திராவில் 20% அதிகரித்துள்ளது என்றார்.