For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி-ரூ.75000 அரியவகை சங்குகள் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.75,000 மதிப்புள்ள அரிய வகை சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்தூக்குடி கடலோர பகுதிகளில் இருந்து கடல் பாசி மற்றும் அரிய வகை சங்குகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. கடலோர போலீஸ் படையினர் இந்த கடத்தலை கண்காணித்து தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தி்ரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட அரிய வகை சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தருவைகுளம் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டு முன் 5 சாக்கு மூடைகள் இருப்பதை பார்த்த போலீசார அதை பிரித்து பார்த்தனர்.

214 அதற்குள் குதிரை மொழி சங்கு, 14 மாட்டுதலை சங்கு, 35 பைனாப்பிள் சங்கு உள்பட 313 சங்குகள் இருந்தது. ரூ.75,000 மதிப்புள்ள அந்த சங்குகளை பறிமுதல் செய்தனர். இந்த சங்குகள் கன்னியாகுமரிக்கு கடத்த இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக உமர்காத்தான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X