இலங்கை பிரச்சினைக்கு பேச்சு மூலமே தீர்வு சாத்தியம்: பிரணாப்
டெல்லி: இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
லோக்சபாவில் இன்றும் இலங்கை இனப் பிரச்சினை குறித்து விவாதம் சூடாக நடந்தது. விவாதத்திற்குப் பதிலளித்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், இலங்கையுடனான பாதுகாப்பு உறவு முக்கியமானது. அதேசமயம், ராணுவ நடவடிக்கை மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு சாத்தியமாகும். இதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.
ராணுவ நடவடிக்ைகயால் தீர்வு சாத்தியமல்ல. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை. இலங்கையில் நீடித்து வரும் போரால் அப்பாவி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவது இந்திய அரசுக்கு கவலை தருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் செயல்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.