For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ கைது: சு. சுவாமி வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

ஜனநாயக நாட்டில், அரசியல் செய்கிறேன் என்ற பெயரில், ஆயுதம் ஏந்துவேன், நாட்டின் ஒற்றுமையைத் தகர்ப்பேன் என வைகோ பேசியது தவறு. அவர் மீதான நடவடிக்கை சரியானது. தேச விரோதமாக பேசியதற்காக வைகோ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் காட்டுவதற்காக முதல்வர் கருணாநிதி இதைச் செய்திருக்கிறார்.

அதே சமயம், புலிகள் ஆதரவுக் கருத்தை வலியுறுத்தும் அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும். ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் உள்பட புலிகள் ஆதரவு தெரிவிக்கும் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் செயலை யார் செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X